districts

img

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு: ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குடவாசல், ஏப்.6 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாறு பாலம் அருகே ஒன்றிய  மோடி அரசின்  பெட்ரோல், டீசல் விலை  உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை  வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் திரளாக பங்கேற்று கண்டன முழக்கமிட்ட னர். குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி கண்டன உரை யாற்றினார். நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடை வீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே. எம்.லிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கண்டன  உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி  கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  ஒன்றிய செயலாளர் என்.இராதா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் கண்டன உரையாற் றினார். குடவாசல் வடக்கு ஒன்றியம் எரவாஞ் சேரி கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்  டி.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார்.