திருவாரூர், ஏப்.23- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவா ரூர் மண்டல மேலாளர் குட வாசல் மற்றும் கோவி லூர் நவீன சேமிப்புக் கிடங்கு களில் பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் முறையில் தனியார்மயமாக்க டெண்டர் கோரிய அறிவிப்பை வெளி யிட்டார். இதனை எதிர்த்து வெள்ளியன்று சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட் டச் செயலாளர் கே.கஜேந் திரன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டத் தலைவர் இரா.மாலதி, சுமைப் பணி சங்க மாவட்டத் தலை வர் எம்.பி.கே. பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். 100-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.