districts

img

சம்பளம், நிலுவைத் தொகையை வழங்குக! துப்புரவுப் பணியாளர்கள், சிஐடியு போராட்டம்

திருவாரூர், டிச.19- திருவாரூர் மாவட்டம் ஊராட்சி கிராமங்களில் பணிபுரியும் ஓஎச்டி ஆபரேட்டர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் மேல்நிலை நீர் தொட்டிகளில் தானி யங்கி ஸ்விட்ச் (Automatic Switch) வைத்து ஓஎச்டி ஆபரேட்டர்கள் வேலையை பறித்திடும் தமிழக அர சின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசின் அர சாணை எண்.152-ஐ வாபஸ் பெற வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்  டும். தூய்மை காவலர்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதி சம்ப ளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்  சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு திங்கட்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அமைப்பின்  மாவட்ட தலைவர் கே.கோவிந்த ராஜ் தலைமை வகித்தார். மாநில குழு நிர்வாகிகள் டி.கலியமூர்த்தி, ஏபிடி.லோகநாயகி, எஸ்.காம ராஜ், கே.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்  கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், எம்.கே.என்.அனிபா, பொருளாளர் இரா.மாலதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர்கள் எஸ்.வைத்தியநாதன், என்.லெனின், பெருளாளர் ஜி. ரெகுபதி, கே.பி.ஜோதிபாசு மற்றும் அமைப்பின் மாவட்ட செயலாளர் எம்.முரளி, திருவாரூர் நகராட்சி  கிளைத் தலைவர் ஆர்.ராஜேந்தி ரன் உட்பட 500 ஊழியர்கள் முற்  றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், நடந்த பேச்சுவார்த் தையில் சிஐடியு தலைவர்கள் பங்  கேற்றனர். இதில், ஒன்றிய அரசின்  ஜல் ஜீவன் திட்டத்தில் மேல்நிலை தொட்டிகளில் நீர் வீணாகாமல் இருக்கும் வகையில் தானியங்கி  ஸ்விட்ச் அமைக்கப்படுகிறது. தற்  போது சோதனை ஓட்டமாக புலி வலம் மற்றும் சில ஊராட்சிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது. மேலும் மேல்நிலைத் தொட்டி யை சுத்தம் செய்வது, அதனை பாது காப்பது என ஊழியர்களின் பணி  தொடரும். துப்புரவு பணியாள ருக்கு அரசாணைப்படி சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்  கப்படும். மற்ற அனைத்து கோரிக் கைகள் குறித்தும் 2023 ஜனவரி 3 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், அனைத்து துறை அதி காரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்றார்.  இதனை ஏற்றுக் கொண்ட போராட்ட குழுவினர், தற்காலிக மாக போராட்டத்தை கைவிட்டனர்.