திருவாரூர், ஏப்.20 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கீழ அக்ரகாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டப மேல்மாடியில் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
நீதிமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்ற, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எஸ். சுந்தர் புதிய நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கலைமதி, ஜி.இளங்கோவன் உரையாற்றினர். முன்னதாக திரு வாரூர் மாவட்ட அமர்வு நீதிபதி எம்.சாந்தி வரவேற்றார்.
இவ்விழாவில், நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் உரையாற்றுகையில், “குடவாசல் மற்றும் எரவஞ்சேரி காவல் நிலையம் சார்ந்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் குடவாசலில் திறக்கப்பட்டுள்ள மாவட்ட உரி மையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரித்து, இப்பகுதி மக்களுக்கு நீதி துரிதமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நீதிமன்றம் குறுகிய காலத்தில் திட்டமிட்டு திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவாரூர் மாவட்டத் தில் கூத்தாநல்லூர் மற்றும் முத்துப் பேட்டை ஆகிய தாலுகாவில் மட்டும் நீதிமன்றம் இல்லாமல் உள்ளது. தற்போது துவங்கப்பட்டுள்ள நீதி மன்றத்தில், மக்களின் பிரச்சனை களை உணர்ந்து அதற்கு தகுந்தவாறு பணியாற்ற வேண்டும். பொது மக்களின் எதிர்பார்ப்புகளை இந்நீதி மன்றம் விரைந்து செயல்படுத்தும்” என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கண்கா ணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு. சண்முநாதன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜ், திமுக ஒன்றியச் செயலாளர் பா.பிர பாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர். குடவாசல் வழக்கறி ஞர் சங்கத்தினர் மற்றும் பலர் நிகழ்ச்சி, நீதியரசர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு கள் வழங்கினர். மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி பி.பாலமுருகன் நன்றி கூறினார்.
குடவாசலில் புதிதாக திறக்கப் பட்ட இந்த நீதிமன்றத்தின் நீதியர சராக சீதாலெட்சுமி நியமிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.