districts

img

ஓஎன்ஜிசி விவகாரம் காவிரி டெல்டாவை பாதுகாப்பதே உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்!

திருவாரூர், செப்.1- திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே வியாழனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்பு சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி உள்ளிட்ட எந்த நிறுவனமும் இயற்கை எரி வாயு எடுக்கக்கூடாது என்பதை வலி யுறுத்தியும் ஓஎன்ஜிசிக்கு ஆதர வாக செயல்படுவோரைக் கண்டித்  தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்  தில் கொட்டும் மழையிலும் குடை யைப் பிடித்துக் கொண்டு விவசாயி கள் பங்கேற்றனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், “தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதியை பாது காப்பது என்பது தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.  காவிரி டெல்டாவில் பூமிக்கடி யில் உள்ள மீத்தேன், ஷேல் கேஸ்,  பெட்ரோல், ஹைட்ரோ கார்பன்  உள்ளிட்ட இயற்கை வளங்களை சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்குத் தாரை வார்க்க ஒன்றிய அரசு திட்டம் தீட்டி செயலாற்றி வரு கிறது. அத்தகைய நிறுவனங்க ளோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப் பந்தங்களை மேற்கொண்டுள்ளது.  இதனை முறியடிக்கும் வித மாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி யதன் விளைவாக தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லமாக அறிவித்தது.  அந்த அரசாணையில், எந்த நிறு வனமும் காவிரி டெல்டா பகுதியில் புதிய இயற்கை எரிவாயு திட்டங்  களை செயல்படுத்தக் கூடாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. ஏற்கனவே செயல்படுத்தப் படும் திட்டங்களை மட்டுமே தொடர அனுமதியளிக்கப்பட்டது.

மூடப்பட்ட துரப்பணக் கிணறுகள்
ஓஎன்ஜிசி நிறுவனம் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு தோண்  டப்பட்டு எண்ணெய் கிடைக்காமல் கைவிடப்பட்டு மூடப்பட்ட கிணறு களில் மீண்டும் பணியைத் துவக்கு வதை தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  எண்ணெய் இல்லாமல் மூடப்  பட்ட கிணறுகளில் சில ஆண்டு களுக்குள்ளாகவே எண்ணெய் ஊறிவிடப் போவதில்லை. ஆனா லும் அத்தகைய கிணறுகளில் பணி யைத் துவக்குவதன் மூலம் அக்  கிணறுகளை மேலும் ஆழப்படுத்தி மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற இயற்கை எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி திட்டமிடுகிறது.  இது அரசு விதிகளுக்குப் புறம்பானதாகும். இந்த விசயத்தில் தொழிற்சங்கங்கள் ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக செயல்படுவது வருத்  தமளிக்கிறது. இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல” என தெரி வித்தார்.

நெல் கொள்முதலை நெறிப்படுத்துக! 
தமிழக திமுக அரசு தேர்தல்  அறிக்கையில் குறிப்பிட்டபடி, நெல் லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் குவிண்டாலுக்கு ரூ. 2820 வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு அமைத்த வேளாண் விளை பொருள் விலை நிர்ணயக் கமிட்டி ரூ.2979 விலை நிர்ணயித்துள்ளது.  ஆனால் தமிழக அரசு ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.700 குறைத்து வழங்குவது பொருத்தமானதல்ல. தனியார்  வியாபாரிகளிடம் கொண்டு செல்  லப்படும் நெல்லுக்கு இன்னும் குறைவான விலையே கிடைக்கி றது.  எனவே, நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 100 சதவீதம் கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். மேலும் எடை மோசடி,  மூட்டைக்கு இவ்வளவு என கட்டாய வசூல், ஈரப்பதம் என சொல்லி விலையைக் குறைப்பது, பணப் பட்டுவாடா செய்ய கால தாமதம் போன்ற குளறுபடிகளைக் களைந்து கொள்முதலை முறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர்,  சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், நிர்வாகிகள் வி.எஸ்.கலியபெருமாள், எஸ்.சாமிநாதன், கே.தமிழ்செல்வி, எஸ். பவுன்ராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியா ழனன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டப்பா அங்காடி  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்  திற்கு சங்கத்தின் மாவட்டத்தலை வர் டி.சிம்சன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சாமி.நட ராஜன், மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், மற்றும் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பல்வேறு விவசாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று முழக்க மிட்டனர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் தலை மையில் வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் கே.முகமது அலி, மாவட்டச் செய லாளர் என்.வி. கண்ணன் ஆகி யோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.  கொட்டும் மழையிலும் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், பலர் கலந்து கொண்டு பேரழிவுத் திட்டங்  களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.