districts

துப்புரவு ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

திருவாரூர், டிச.20 -  தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநக ராட்சிகளில் 20 வகையான நிரந்தர பணி யிடங்களை தனியார் மயமாக்கும் அர சாணை எண்.152-ஐ ரத்து செய்திட கோரி நகராட்சி துப்புரவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக ஒருநாள் வேலை நிறுத்தம் நடை பெற்றது.  திருவாரூர் ரயில் நிலையம் அருகே இருந்து துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பேரணியாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி துப்புரவு ஊழி யர் சங்கத்தின் கிளை தலைவர் ஆர்.ராஜேந்தி ரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே.என்.அனிபா, துணை செயலாளர் எஸ். வைத்தியநாதன், அமைப்பின் மாவட்ட தலை வர் எம்.முரளி ஆகியோர் கோரிக்கையை நிறைவேற்ற கோரி கண்டன உரையாற்றி னர். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைப்பின் மாவட்ட ஒன்றிய, நிர்வாகிகள் பங்கேற்றனர்.