திருவாரூர், மார்ச் 27 - திருவாரூர் வட்டம் ஆத்தூர் ஊராட்சி இராதாநல்லூர் காலனித்தெருவில் ஜெய செல்வம் - சசிகலா வசித்து வந்த கூரை வீட்டை தீ வைத்து எரித்த பாரதிதாசன், நாகராஜன், வேம்பு ஆகியோரை கைது செய்யாமல் அவர்கள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இதன் காரணமாக இருந்த காவல்துறை யைக் கண்டித்து சனிக்கிழமை தென்னவராய நல்லூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை யேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கோமதி, ஒன்றிய செயலாளர் என்.இடும்பை யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில், சட்ட நடவடிக்கையின் மூலமாக குற்றவாளி களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை யடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.