districts

img

புதிய மருத்துவமனை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருக! பூந்தோட்டத்தில் சிபிஎம் கையெழுத்து இயக்கம்

குடவாசல், அக். 5 -  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.  பூந்தோட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக 30 படுக்கை கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு, பணி நிறைவு பெறாமல் உள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடத்தை பணி நிறைவு செய்து உடனடியாக மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பூந்தோட்டம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி சுகாதாரமான முறையில் நவீன கழி வறையை பூந்தோட்டம் கடைத்தெரு வில் அமைத்து தர வேண்டும்.  பூந்தோட்டம் தனியார் வங்கி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குட்டையில் கழிவு நீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாய நிலை  உள்ளது. எனவே உடனடியாக அந்த  குட்டையை நிரந்தரமாக மூட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிபிஎம் அகரதிருமாளம்-பூந்தோட் டம் கிளை சார்பில் மக்களை சந்தித்து  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  கையெழுத்து இயக்கத்திற்கு கட்சி  கிளை செயலாளர் பி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எம்.சலாவுதீன், ஒன்றிய குழு உறுப்பினர் இப்ராகிம்சேட் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். செயற் குழு உறுப்பினர் எம்.சேகர் கையெ ழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமதுஉதுமான் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கையொப்பங்களும், கோரிக்கை அடங்கிய மனுவும் மாவட்ட ஆட்சியர்,  நன்னிலம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட துறை  சார்ந்த அலுவலர்களிடம் அளிக்கப்பட்டது.

;