நன்னிலம்/குடவாசல், பிப்.16 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் தேர்வுநிலை பேரூராட்சி 1 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சித்ரா மனோகரன் மற்றும் 12 ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பி.ராஜா ஆகியோருக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு, பேரளம் ரயில்வே குட்செட்டில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் திருமியச்சூர் கிராம மக்களிடம் வாக்கு சேகரிப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், மாவட்ட கவுன்சி லர் ஜெ.முகமதுஉதுமான், பேரளம் நகர செயலாளர் எஸ்.ரஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் மற்றும் கிளைச் செயலா ளர்கள் பங்கேற்றனர். குடவாசல் குடவாசல் பேரூராட்சியில் போட்டி யிடும் சிபிஎம் வேட்பாளர்களுக்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கலைமணி தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. குடவாசல் பேரூராட்சி 2 ஆவது வார்டு வேட்பாளர் ஆர்.லெட்சுமி மற்றும் 15 ஆவது வார்டில் போட்டி யிடும் ஆர்.அமுதா ஆகியோருக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அத்திக்கடை தெற்கு - வடக்கு தெரு மற்றும் தண்டலை, அர சூர், ஓகை பகுதிகளில் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விதொச மாவட்டச் செயலாளரு மான ஆர்.குமாரராஜா, குடவாசல் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆனந்தன், தலைவர் ஏ.சிவசாமி மற்றும் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்தனர்.