districts

மூலங்குடி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்: சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், டிச.19-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் ஓகையில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்த மான ஆறு ஏக்கர் விளையாட்டு மைதா னம் மூலங்குடியில் உள்ளது.  குடவாசல் சுற்று வட்டாரம் விவசாயி களும், விவசாய கூலித் தொழிலாளர்களும் பெருமளவு நிறைந்த பகுதியாகும். இங்  குள்ள மாணவர்கள் மற்றும் இளை ஞர்கள் தினந்தோறும் இந்த விளை யாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடு கின்றனர். ஆனால் இந்த விளையாட்டு மைதானம் போதிய வசதிகளின்றி உள்ளது.  இதனை சுட்டிக்காட்டி, ‘தொகுதிக்கு ஒரு திட்டம்’ என்று தமிழக முதல்வர் அறி வித்துள்ள திட்டத்தில் விளையாட்டு மைதா னத்தில் பொதுமக்கள் மற்றும் மூத்த குடி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி யாக நடைபயிற்சி மேடை அமைத்து தர  வேண்டும். இளைஞர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளையும் இந்த மைதானத்தில் அமைத்து தர வேண்டும். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்ற பின் தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் அமைப்பதாக உறுதியளித்துள்ளார். ஏற்கனவே தமிழக முதல்வர் அறிவித்துள்ள தொகுதிக்கு ஒரு திட்டத்தில், நன்னிலம் சட்டமன்ற தொகுதி சார்பாக குடவாசல் மக்களின் கோரிக்கை யை ஆய்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும். விவசாயத்தை மட்டும் நம்பி உள்ள இப் பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்கண்ட விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தனது அறிக்கையில் தெரி வித்துள்ளார்.