திருத்துறைப்பூண்டி, மே 5- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகரத்திற்குட்பட்ட மன்னார்குடி சாலையில் நீண்ட நாட்களாக உடல் நலிவுற்று கை, கால் செயலிழந்த நிலையில் இருந்து வந்த பொறியியல் பட்டதாரி கபிலுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் உதவி தொகை வழங்கிட வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வியாழனன்று மன்னார் குடி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலை வர் டீ.சந்திரா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கெரகொரியா, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன், மாவட்டக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், பிரகாஷ், நகரச் செயலாளர் கோபு, உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வந்த வட்டாட்சியர் அலெக்சாண்டர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோம சுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இதில் பாதிக்கப்பட்ட தோழர் கபி லுக்கு மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவரது குடும்ப நலன் கருதி வங்கி யில் கடன் உதவி பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததால் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.