districts

img

தியாகி ஜெ.நாவலன் நினைவுநாள் சிபிஎம் தலைவர்கள் செவ்வணக்கம்

திருவாரூர், ஜன.19-  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யம் பேரளம்-திருமீயச்சூரில் அமைந்துள்ள தியாகி ஜெ.நாவலன் நினைவு இடத்தில் 12-ஆம் ஆண்டு நினைவு வீரவணக்கம், மல ரஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடை பெற்றது. நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம். லிங்கம் தலைமை வகித்தார். நகரச் செயலா ளர் சீனி.ராஜேந்திரன் முன்னிலை வகித் தார். வீரவணக்கம்-மலர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் செங் கொடியை ஏற்றி, தியாகி நாவலன் நினைவு  ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம். சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குமரராஜா, தலைவர் எம்.கலைமணி, சிஐடியு மாவட்ட பெருளாளர் இரா.மாலதி, மாவட்ட கவுன்சிலர் ஜெ. முகமதுஉதுமான், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், விவசாயி கள் சங்க மயிலாடுதுறை மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் பேர ளம் கடை வீதியில் வீரவணக்கம் பொதுக்  கூட்டம் நடைபெற்றது.
வாலிபர் ரத்த தானம்
ஜெ.நாவலன் 12-ஆம் ஆண்டு நினைவு  தினத்தையொட்டி நன்னிலம் ஒன்றிய வாலி பர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் பேர ளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் எஸ். சுரேந்தர் தலைமை வகித்தார். ஒன்றிய செய லாளர் கே.எம்.பாலா, இரத்ததான கழக  கன்வீனர் ஜெ.கக்கன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 40 இளை ஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.  நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஏ.கே. வேலவன், மாவட்ட செயலாளர் எஸ்.எம். சலாவுதீன், மாவட்ட பொருளாளர் எம்.டி. கேசவராஜ் மற்றும் மாவட்ட பொறுப்பா ளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பின்னர் பேரளம் கனரா வங்கியில் இருந்து வாலிபர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற பேரணியை சிபிஎம் மாவட்ட கவுன் சிலர் ஜெ.முகமது உதுமான் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாநிலச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமையில் தியாகி ஜெ.நாவலன் நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.