districts

img

குடவாசல் : சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து ஜி.சுந்தரமூர்த்தி வாக்குச் சேகரிப்பு

குடவாசல், பிப்.17-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ஆவது வார்டு வேட்பாளர் ஆர்.லெட்சுமி, 15,-ஆவது வார்டு வேட்பாளர் ஆர்.அமுதா ஆகியோரை ஆதரித்து மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் வியாழனன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.  இதில் சிபிஎம் ஒன்றிய செயலளார்கள் (தெற்கு) ஆர்.லெட்சுமி, கே.ரவிசந்திரன் (வடக்கு), மாவட்ட குழு உறுப்பினர் எப். கெரக்கோரியா, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் டி.ஜி.சேகர், எஸ்.ஆனந்தன், எஸ்.கிருஸ்துவநாதன், டி.ஏ.சரவணன், கே.பகத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.