குடவாசல், ஜூலை 9 - கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் பேருந்து நிலையத் திற்கு மேற்கூரை அமைத்தும், பழைய வணிக வளாக கட்டிடங்களை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் மற்றும் இருசக்கர வாகன பாதுகாப்பகம், நவீன கழிவறை உள்ளிட் டவை அமைக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு பணி துவங்கிய திலிருந்து ஆமை வேகத்தில் பணிகள் நடை பெற்று, ஒரு வழியாக அனைத்துப் பணி களும் இரண்டு ஆண்டுக்குப் பின் நிறை வடைந்தன. மேற்குறிப்பிட்ட அனைத்து பணி களும் முடிவடைந்த நிலையில், சீரமைக்கப் பட்ட புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படாமலே இருந்தது. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடவாசல் ஒன்றியக்குழு சார்பாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்மூலம், கடந்த ஆட்சியில் பேருந்து நிலையம் மட்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் வணிக வளாகம், இருசக்கர பாது காப்பகம், நவீன கழிவறை மட்டும் செயல் பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலை யில் மீண்டும் சிபிஎம் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கழிவ றையை மட்டும் பேரூராட்சி நிர்வாகம் திறந்தது.
பின்னர் இருசக்கர வாகன பாது காப்பு நிலையம் திறக்கப்பட்டது. மேலும் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளா கத்தை திறக்கக் கோரி பலமுறை பேரூ ராட்சி செயலரிடம் மனு கொடுத்தும், தற்போது வரை வணிக வளாகம் திறக்கப்படா மலே உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற திமுக பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலு வலரிடம், கட்டி முடிக்கப்பட்ட வணிக வளா கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என முதல் கூட்டத்திலேயே கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் 24 ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத் தையும், ஏற்கனவே பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ள நபர்களுக்கு முன்னு ரிமை கொடுத்து ஏலம் விடுவதாக முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை அனைவரும் வரவேற்ற நிலையில், பேரூராட்சி மன்ற முடிவின்படி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட வணிக வளாகம் குறிப்பிட்ட தேதியில் மறு ஏலத்திற்கு வருமா..? என ஏற்கனவே கடை வைத்த வணிகர்களும், புதிதாக கடை வைக்க காத்திருக்கும் நபர்களும் எதிர்பார்ப்பு டன் உள்ளனர். பேரூராட்சி கூட்ட முடிவின்படி வணிக வளாகம் ஏலம் விடும் தேதியை உடனே அறிவித்து வணிகர்களுக்கு உரிய முறையில் கடைகளை வாடகைக்கு விட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.