districts

கண்டியூர் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கும்பகோணம், ஏப்.22 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் அரசு பள்ளிக் கூடத்தில் மதிய உணவாக எலுமிச்சை சாத மும் முட்டையும் மாணவர்களுக்கு வழங்கப் பட்டது. அதில் மதிய உணவு சாப்பிட்ட 36  குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் வருவ தாக மாணவர்கள் தெரிவித்த நிலையில் ஆசிரி யர்கள் அருகே உள்ள ஆலங்குடி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்களின் பரிசோத னைக்குப் பிறகு, உணவில் விஷத்தன்மை இருப்பதாக தெரிவித்த நிலையில், 36 குழந்தைகளையும் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக் காக பரிந்துரை செய்ததன் பேரில், அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் சாப்பிட்ட முட்டை பழைய முட்டையாக இருந்திருக்கும் என கூறப்படு கிறது. இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ராதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், தஞ்சை மாவட்ட  செயற்குழு உறுப்பினர் மனோகரன், கும்ப கோணம் மாநகர செயலாளர் செந்தில்குமார், மாநகர குழு உறுப்பினர்கள் ம.கண்ணன், பழ. அன்புமணி, இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் நேரில்  சென்று மாணவர்களின் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.  இதுபோன்று மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல், தரமற்ற உணவுகளை யும் முட்டைகளையும் வழங்கியவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.