districts

img

வேலை வாங்கி தருவதாக மோசடி: பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் கைது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2.65 லட்சம் மோசடி செய்த புகாரில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன்(56) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் பாஜகவின் மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர் சிலருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், வெளிநாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டும் இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகனுக்கு வி.ஏ.ஒ வேலை வாங்கித் தருவதாக பல கட்டங்களாக ரூ.2.65 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து, வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தையும் திருப்பு தராமலும் இழுத்தடித்து வந்துள்ளார்.எனவே ராஜேந்திரன் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.