திருவாரூர், ஜூன் 6 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் ஜல் சக்தி அபியான் (நீர் மேலாண்மை) திட்டத் தின் செயல்பாடுகள் தொடர் பான கூட்டம் மத்திய பாது காப்பு அமைச்சகத்தின் இயக்குநர் டி.பிரவீன் தலை மையில் நடைபெற்றது. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அலுவலர்களி டம் ஆய்வு நடத்திய பின், அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு ஜல் சக்தி அபி யான் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ள இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் செயல் படுத்துவதில் அரசால் வழங் கப்பட்டுள்ள இலக்குகளை காலவரைக்குள் முடித்திட வேண்டும். இத்திட்டத்தினை மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்திட வேண்டும் என இயக்குநர் டி.பிரவீன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ் ணன், மாவட்ட வருவாய் அலு வலர் ப.சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் தெய்வ நாயகி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகுவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.