districts

img

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சி யர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கட்  கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப  அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 231 மனுக்களை மாவட்ட ஆட்சி யரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட  மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், மனுக்களை  வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2 திருநம்பிகளுக்கும், ஒரு திருநங்கைக்  கும், ‘திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை’களை வழங்கினார்.