திருத்துறைப்பூண்டி, ஜன.8 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைதுறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி வேளாண்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் தலைமை வகித்து நடத்தினார். திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் ஆர்.சாமிநாதன், துணை வேளாண் அலுவலர் பி.ரவி மற்றும் உதவி வேளாண் அலுவலர் என்.ஜோதி கணேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.பாலு ஆகியோர் வேளாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். 2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவலஞ்சுழியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அ.பாஸ்கர் எழுதிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜி.முருகையனின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் வேளாண்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.