districts

img

டெல்டா மாவட்டங்களில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி - போட்டிகள்

திருவாரூர்/திருவாரூர்/கரூர்/பெரம்பலூர், ஜூலை 17 -  திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் அவர்களது தாத்தா, பாட்டி களுடன் இணைந்து செஸ் விளை யாடினர். இதில் சிறியவர்கள், பெரிய வர்கள் என மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தொ டங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் பயிற்சிக்காக வீரர்கள் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை  காலை 6 மணி முதல் 9 மணி வரையி லும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செஸ் விளையாட செஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடலாம்.
கரூர்
இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர் வைக்கப்பட்டது. விளம்பர பேனரை பேரூராட்சி செயல் அலுவலர் க.பாலசுப்பிரமணியன் பொதுமக்கள் பார்வைக்கு வைத் தார். இளநிலை உதவியாளர் முரு கேசன், எழுத்தாளர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 44  ஆவது செஸ் ஓலிம்பியாட் தொடர் பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அன்னை சத்யா விளை யாட்டரங்கில் சதுரங்க வடிவில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர் அந்தோணி அதிஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மு.தேன்மதி, மாவட்ட விளையாட்டு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.           

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தப்படும் சது ரங்க விளையாட்டுப் போட்டிகளில், மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவி யர் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.  பள்ளிக் கல்வித்துறை மானியக்  கோரிக்கையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் சர்வதேச சது ரங்க ஒலிம்பியாட் போட்டி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு, சதுரங்க விளை யாட்டு குறித்து ஆர்வத்தை ஏற்படுத் தும் வகையில், பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள்  நடைபெற உள்ளன.  மாவட்ட அளவிலான போட்டி களில் வெற்றி பெறும் மாணாக்கர்கள்  மாநில அளவிலான சதுரங்கப் போட்டி களில் பங்கேற்று விளையாடுவர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர் களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு  வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு  சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு போட்டி குறித்து  பயிற்சி அளிக்க ஏதுவாக தஞ்சை  மாவட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரி யும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13  முதல் 15 வரை இப்போட்டிகள் 1-5  வகுப்புகள், 6-8 வகுப்புகள், 9-10  வகுப்புகள் மற்றும் 11-12 வகுப்புகள் என நான்கு பிரிவுகளாக நடைபெறு கின்றன. அதற்கான ஏற்பாடுகளை தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர்  சிவக்குமார் மற்றும் மாவட்ட உடற்கல்வி  ஆய்வாளர் செய்துள்ளனர்.

“நம்ம செஸ் நம்ம பெருமை” மாரத்தான் 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “நம்ம செஸ் நம்ம பெருமை” மாரத்தான் போட்டி யினை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.  இந்த மாரத்தான் போட்டி, பெரம் பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி பாலக்கரை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சி யரக அலுவலக வளாகம் வரை நடை பெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் அமைக்கப்பட்ட தன் புகைப் படம் (செல்பி) எடுப்பதற்கான அமைப் பில் மாவட்ட ஆட்சியருடன் மாண வர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட னர். செஸ் ஒலிம்பியாட் குறித்த “வெல்கம் டு நம்ம ஊரு சென்னை”  என தொடங்கும் விழிப்புணர்வு விளம்பர வீடியோ, பெரம்பலூர் மாவட்ட  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன வீடியோ வாகனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.