districts

img

இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளி அங்கன்வாடி கட்டிடம் மாணவர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

திருத்துறைப்பூண்டி,  நவ.18 - திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேகல் ஊராட்சி, சேகல் கோட்டகப் பகுதியில் அமைந் துள்ள அரசினர் நடுநிலைப் பள்ளி யின் அங்கன்வாடி கட்டிடம் மிகவும்  பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் பள்ளி கட்டிடத்தின் முகப்பு முற்றிலும் இடிந்து, மழைக் காலங்களில் மேற்கூரையிலிருந்து நீர் வழியக்கூடிய நிலையிலும் உள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த கட்டிடம் எப்போது அகற்றப்பட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படும், மேற்கூரை எப்போது பழுது நீக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கே.வேலவன், ஒன்றிய தலைவர் சி.வீரசேகரன், ஒன்றிய பொருளாளர் பார்த்திபன், ஒன்றிய குழு உறுப்பினர் சுர்ஜித் ஆகியோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் நேரில் சென்று பார்வை யிட்டனர்.  இந்த நடுநிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பயின்று வருகின்ற னர். இப்பள்ளியில் ஏழை மாண வர்கள் அதிகம் பயில்கின்றனர்.

இந்த மாணவர்களுக்கான சமை யல் செய்யக்கூடிய கட்டிடம் மிகவும் மோசமாக இருப்பதால், வகுப்பறையில் சமைத்து மாண வர்களுக்கு உணவு வழங்க வேண்டிய நிலை உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், சில வகுப்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே  வகுப்பறையில் நடத்த வேண்டிய அவலநிலையும் தொடர்கிறது. நிதி  ஒதுக்கி போர்க்கால அடிப்படை யில் புதிதாக அங்கன்வாடி கட்டிட மும், மேற்கூரை மற்றும் வகுப்பு களை பழுதுநீக்கம் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக பல முறை ஊராட்சி ஒன்றியங்களிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. சரி  செய்து தருகிறோம் என அதிகாரி கள் கூறுகின்றன. ஆனால் இது வரை சரிசெய்யவில்லை என ஆசிரி யர்கள் தெரிவித்தனர். வட்டார வளர்ச்சி அலுவல ரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலை வரும் உடனடியாக இதை கவ னத்தில் எடுத்துக் கொண்டு, பழுத டைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும். மேற்கூரை மற்றும் முகப்புகளை பழுது நீக்கம் செய்து  பள்ளி மாணவர்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டு மென இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு சார்பில் வேண்டு கோள் வைக்கப்பட்டுள்ளது.