திருவாரூர், பிப். 23 - வேளாண் விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை அடிப்படையில், உற்பத்திச் செலவைக் காட்டிலும் 50 சத விகிதம் கூடுதல் விலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்; இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் போராடி வருகின்றன.
இந்நிலையில் அவர்கள் மீது மோடி அரசு பெரும் அடக்குமுறையைக் கட்ட விழ்த்து விட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதுவரை 2 பேர் பலியாகி யிருக்கின்றனர். நூற்றுக்கணக்கா னோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மோடி அரசின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரி வித்து, வெள்ளியன்று தமிழ்நாடு முழு வதும் போராட்டங்கள் நடைபெற்றன.
அதனொரு பகுதியாக, ஐக்கிய விவ சாயிகள் முன்னணியின் மாவட்ட மையம் சார்பில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். தம்புசாமி தலைமை வகித்தார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் கண்டன உரையாற்றினார்.