districts

img

எட்டியலூர் கிராம இளைஞர்கள் 30 பேர் வாலிபர் சங்கத்தில் இணைந்தனர்

குடவாசல், ஜூலை 13 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் வடகண்டம் ஊராட்சி எட்டியலூர் கிராமத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 30 இளைஞர்கள் தேவா தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்தனர்.  நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.ஜெய்கிஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு வாலிபர் சங்கத்தில் இணைந்த இளைஞர்களை வரவேற்று வெண்கொடியை ஏற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் பா.விஜய், செயற்குழு உறுப்பினர் ஜீ.தனுஷ்கோடி, ஒன்றியத் தலைவர் கே.குபேரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.செந்தில், சிபிஎம் கிளைச் செயலாளர் தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;