districts

தூர்வாரும் பணிகள்:  காணொலி மூலம் ஆய்வு

 திருவாரூர், மே 21 - காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகள் குறித்த ஆய்வுக்  கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக கூடுதல் தலைமை  செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா காணொலி காட்சி வாயி லாக திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யர்களுடன் ஆய்வு நடத்தினார்.  காவிரி டெல்டாவில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில அரசாணை 24-ன் படி ரூ.7150 லட்சத்திற்க்கு 549 பணிகளை மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வார 115 பணிகள் மூலம் 1200.56  கி.மீ நீளத்திற்கு பணிகள் துவங்கி நடைபெற்று வரு கின்றன. இதில் 35 பணிகள் 344.15 கி.மீ நீளத்திற்கு தஞ்சா வூர் காவிரி வடிநிலக் கோட்டம் மூலமாகவும், 38 பணிகள் 333.75 கி.மீ நீளத்திற்கு தஞ்சாவூர் வெண்ணாறு வடிநிலக் கோட்டம் மூலமாகவும், 42 பணிகள் 522.26 கி.மீ நீளத்திற்கு திரு வாரூர் வெண்ணாறு வடிநிலக் கோட்டம் மூலமாகவும் செயல் படுத்தப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.  இப்பணிகள் குறித்து நடைபெற்ற இக்கூட்டத்தில் திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி (திருச்சி மண்டலம்), கண்காணிப்பு பொறியாளர் எஸ்.அன்பரசு, செயற்பொறியாளர் முருக வேல் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.