districts

img

விளக்குடி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுக! சிபிஎம் தொடர் காத்திருப்பு போராட்டம்

குடவாசல், ஜுலை 16 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றியம் விளக்குடி ஊராட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி சிபிஎம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் விளக்குடி கடைவீதியில் நடைபெற்றது. சிபிஎம் கிளைச் செய லாளர் நாக.அறிவழகன் தலைமை வகித்தார்.  விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் 24 மணி நேரமும் நிரந்தர மாக மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கும் வகையில் உடனே நியமிக்க  வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத் தில் 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் கண் காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விளக்குடியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ஊராட்சி  மன்ற அலுவலகத்தில் பொது கழிப்பி டம், பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும்.  விளக்குடி ஊராட்சியில் கூடுதல் நீர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து தட்டுப்பாடின்றி மக்க ளுக்கு குடிநீர் வழங்கிட வேண்டும். விளக்குடியில் இயங்கி வரும் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டி டம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற தொடர் காத்திருப்பு போராட் டத்தை சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார். கட்சியின் செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பி னர் சுப்பிரமணியன், திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.மாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு நேரில் வந்த துறை சார்ந்த அலுவலர்கள், சிபிஎம் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அனைத்து கோரிக் கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த னர். இதனையடுத்து மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி போராட்டத்தை தற்காலிகமாக நிறைவு செய்தார்.