குடவாசல், நவ.18 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடி அலி தெருவில் வசித்த சிபிஎம் உறுப்பினர் தோழர் கே. எம்.எம்.அக்பர்தீன் (63) வியாழக்கிழமை காலமா னார். இவர் கட்சியின் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினராகவும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட துணை தலை வராகவும், கரும்பு விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். இவரது மறைவு செய்த அறிந்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி னர். மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பி னர்கள் மற்றும் பலர் வெள்ளிக்கிழமை நடை பெற்ற இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.