திருவாரூர், மார்ச் 25- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றி யம் மணப்பறவையில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பணி நிறைவேற்றப்பட்ட 94 வீடுகளுக்கும் இது வரை குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல், அரசு சார்பில் விளம்பர பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் மணப்பறவை, மடத்து தெருவைச் சேர்ந்த ராஜாராமன் கடந்த பல வருடமாக முறையாக குடி நீருக்கு பணம் செலுத்தியும் ஊராட்சி மன்ற குடிநீர் இணைப்பு வாயிலாக தண்ணீர் பெற்று வந்த நிலையில், ஜல்ஜீவன் திட்டத் தில் பணி நடைபெறும் போது அவரின் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட் டது. இணைப்பு பணிகள் முடிந்தும் இது நாள் வரை குடிநீர் இணைப்பு வழங்க வில்லை. மேலும் பயனாளி 2021-22 ஆம் ஆண்டு வரையில் குடிநீருக்கு வரி செலுத்தி யும் உள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்பரமணி யன் உத்தரவின் படி பயனாளிக்கு வழங் கப்பட வேண்டிய ஜல்ஜீவன் குடிநீர் திட் டத்தில் பணி முடிந்தும் 3 வருட காலமாக தண்ணீர் குழாய் இணைப்பு கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராஜாராமன் கூறுகை யில், ‘‘கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்ட முன் விரோத காரணமாக தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுக்கா மல் ஊராட்சி மன்ற தலைவர் தடுத்து வரு கிறார்’’ என்று கூறினார். மேலும் ராஜாராமன், குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தும் இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை என வேதனை யுடன் தெரிவித்தார். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய முறையில் விசாரணை செய்து, ராஜா ராமன் வீட்டிற்கு குடிநீர் இணைப்பை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.