திருவாரூர், மார்ச் 9- சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் 10-அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி மார்ச் 6 அன்று தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து துவங்கிய வாகன பிரச்சார பயணம் புத னன்று திருவாரூர் வந்தடைந்தது. திருவாரூர் பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடைபெற்ற பிரச் சார இயக்கத்தில் அமைப்பின் நாகை மண்டல தலைவர் ஏ.கோவிந்தராஜ் பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்தி ரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.