districts

குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர், மே 1 - முத்துப்பேட்டை காவல் சரகம் கோவிலூர் பகுதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட சாதி ரீதியான முன் விரோதம் காரணமாக தொடர் கொலை சம்பவங்கள்  நிகழ்ந்து வந்தன. அதனைத் தடுக்கும் விதமாகவும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக வும் இரு தரப்பிலும் சம்பந்தப் பட்ட நபர்கள் மீது காவல் துறை தொடர் நடவடிக்கை களை மேற்கொண்டது.  இந்நிலையில் மீண்டும் பழிவாங்கும் நோக்கத்துடன் தலைமறைவாக இருந்த கைலாசம் என்பவரது மகன்  மந்திரமூர்த்தி (24) என்பவரை  கைது செய்ய தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.  இதனைத் தொடர்ந்து மந்திர மூர்த்தியை குண்டர்  சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

;