திருவாரூர் தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை அஜீத் மென்ஸ் வேர் என்ற பெயரில் ஆண்களுக்கான ஆடையகம் திறக்கப்பட்டது. இதனை கர்நாடக அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆலோசகர் வி.பாலசுப்ரமணியன் திறந்து வைத்தார். உரிமையாளர்கள் ஏ.அருள்அமிர்தராஜ், இ.தேவன்யேசு வரவேற்றனர். வர்த்தக சங்க தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சேவை சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.