திருவாரூர். ஜன.29- திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க திருவாரூர் மாவட்ட 20--வது மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.கலை மணி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.சங்கர் தொடங்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்த லிங்கம் நிறைவுரையாற்றினார். பி. கந்தசாமி நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர் ஆர்.குமார ராஜா, மாவட்டப் பொருளாளர் என்.பாலைய்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக ஆர்.குமாரராஜா, மாவட்டச் செயலாளராக பி.கந்தசாமி, மாவட்டப் பொருளாளராக ஆறு. பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், விவசாயத் தொழி லாளிக்கு தனித்துறையை உரு வாக்கிட வேண்டும், முதியோர் உத வித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்க ளாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.