districts

img

இருளர் குடியிருப்பில் தீண்டாமை சுவர்!

திருவள்ளூர், பிப் 9 - ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் மேடு பகுதி யில்  இருளர் இன மக்கள் குடியிருக்கும் பகுதியை சுற்றி எழுப்பியுள்ள தீண் டாமைச் சுவரை அகற்ற  வேண்டும் என தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள  கச்சூர்மேடு, வாழவந்தான் கோட்டையில் 150க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் கடந்த 20  ஆண்டுகளுக்கும் மேலாக  குடியிருந்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்க ளுக்கு பிறகு குடிமனை பட்டா பெற்று தொகுப்பு வீடுகள் கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருளர் இன மக்கள் குடியிருக்கும் பகுதியை ஒட்டி,  பாஸ்கர் ராவ் என்ற தனிநபர் வீட்டு மனை பிரிவு (லே அவுட்)  அமைத்துள்ளார். அந்த வீட்டு மனை பிரிவில் 23 அடி  அகலத்தில் சாலை அமைக்க ஊராட்சிக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். இந்த சூழலில் ஊராட் சிக்கு சாலைக்காக ஒதுக்கிய நிலத்தில் வீட்டு  மனை விற்பனை உரிமை யாளர் பாஸ்கர ராவ் என்ப வர் இருளர் இன மக்கள் குடியிருக்கும் பகுதியை சுற்றி கடந்த இரண்டு நாட்க ளாக  சுவர் எழுப்பி வருகின்றனர்.

இந்த தகவல் அறிந்ததும் சிபிஎம் கிளை செயலாளர் வழக்கறிஞர் சுதாகர், வழக்கறிஞர் பாக்யராஜ் ஆகியோர் தடுத்துள்ளனர். இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் இ.எழிலர சன், மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன்,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு ஆகியோர் புதனன்று (பிப் 9) சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர். இதன்பின்னர்  கூறுகை யில், தீண்டாமை சுவரை இடித்து தள்ள வேண்டும், இருளர் மக்களுக்கு மழைநீர் கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப் படை உரிமைகள் செய்து தர வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேரம் என்பதால்  அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார் கள் என்பதால் சுவர் எழுப்பு கின்றனர்.இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றனர்.