திருவள்ளூர், மார்ச் 29- திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் வழங்கும் விவசாயி களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலை மையில் புதனன்று (மார்ச் 29) திருத்தணி கோட்டாட்சியரிம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தி லிருந்து ஆந்திர மாநிலம், நகரி வரையில் 184 கி.மீ. தொலைவுக்கு புதிய அகல ரயில் பாதை சுமார் ரூ.498 கோடியில் அமைக்கப் படும் என்று முந்தைய ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்க உள்ளனர். இதற்காக ஏறக்குறைய 40 கி.மீ. தூரம் திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 400 கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களை எடுக்கவுள்ளனர். இந்த திட்டத்திற்கு தங்கள் நிலங்களை கொடுக்க தயாராக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நிலத்திற்கான வழிகாட்டுதல் மதிப்பு 33 விழுக்காடு வரை குறைத்துள்ளது. இதனடிப்படையில் நிலத்திற்கான இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது நிலவும் சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும், அதோடு நிலத்தில் உள்ள மரங்கள், கிணறு, வீடுகள் போன்ற வற்றிக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், திட்ட மதிப்பீடு அறிக்கையை மக்கள் பார்வைக்கு தமிழ் மொழியில் வெளி யிட வேண்டும், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும், என வலியுறுத்தி 200 கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைமையில் ஒன்றிணைந்து புதனன்று (மார்ச் 29), திருத்தணி கோட்டாட்சி யர் ஷசரத் பேகத்திடம் மனு அளித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், பொருளா ளர் சி.பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது, விவசாய ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.