districts

பூண்டி ஏரியின் நீர்மட்டம்  2 டி.எம்.சி.யை தாண்டியது

திருவள்ளூர்,நவ.24-  திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது.  ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். தற்போதைய  நிலவரப்படி 2,023 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 450 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் சென்னைக்கு 53 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 192 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி ஆகும். 457 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 257 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. இதில் இன்றைய நிலவரப்படி 2484 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 139 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் 139 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடி நிரம்பி வழிகிறது.