districts

மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர்

திருவள்ளூர், ஜூலை 25- பழங்குடி இன மாணவியை கன்னத்தில் அறைந்து காயப்படுத்திய ஆசிரியரியை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருத்தணி வட்டம், திருவலாங்காடு ஒன்றியம்,  பொன்பாடி ஊராட்சி ஏரிக்கரை இருளர் பகுதியில் வசித்து வரும் கெங்கை யன்- அமுலு ஆகியோருக்கு ரோசினி (வயது 16), மாதவன் (12), என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மாதவன், மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். ரோசினி, மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று நடப்பாண்டு 10 ஆம்  வகுப்பு தேர்வு எழுதியதில் தமிழ், கணிதம்,  அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தோல்வி அடைந்தார்.

மறு தேர்வு எழுதுவதற்கு திருத்தணி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு ஜூலை 8  அன்று சென்றார். சமுக அறிவியல் தேர்வு  எழுதும் அறையில் வினாத்தாள் கொடுத்த வுடன் கண்காணிப்பாளராக வந்த பெண் ஆசிரியர் அறிவுரை கூறியுள்ளார். அதற்கு மாணவி ரோசினி, மேடம் நீங்கள் பேசியது சரியாக புரியவில்லை என்று கூறியவுடன் அந்த ஆசிரியை மாணவியின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ரோசினி மூக்கில் ரத்தம் சொட்ட மயங்கி கீழே விழுந்துள்ளார்.

சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்த வுடன் மீண்டும் தேர்வு எழுதி முடித்துள்ளார்.  பின்னர் அந்த ஆசிரியர் நான் அடித்ததை நீ வெளியில் சொல்லி பிரச்சனை ஏதேனும் வந்தால்,மதிப்பெண் குறைத்து விடுவேன். மீண்டும் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத  அளவிற்கு செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மாணவி வெளியில் வந்து அப்பாவிடம் நடந்ததை கூறியுள்ளார். உடனே திருத்தணி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சென்ற போது மருத்துவர், தாக்குதல் சம்ப வம் குறித்து  காவல்துறையில் வழக்கு பதியலாமா  என்று கேட்டதற்கு வேண்டாம் என்று கூறி சிகிச்சை மட்டும் பெற்று வீடு  திரும்பினர்.

பழங்குடி இருளர் சமூகத்தில் பெண்பிள்ளைகள் கல்வி கற்பதே பெருங் கனவு என்கிற நிலையில் பெண் ஆசிரியர் ஒருவர்முரட்டுத்தனமாக  மாணவி ரத்தம் சிந்தும் அளவிற்கு அடித்தது மிகவும் கொடு மையானது. அந்த ஆசிரியரை கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மாணவிக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி  அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெறவும், படிப்பை தொடரவும் மாவட்ட ஆட்சியர் உரிய  நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளார்.