திருவள்ளூர், ஏப்.10 - 12 பழங்குடியின குடும்பத்திற்கு குடும்ப அட்டை, குடிமனைப் பட்டா வழங்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார். ஆர்.கே.பேட்டை வட்டம், எரும்பி ஊராட்சிக் குட்பட்ட திருவள்ளுவர் தெரு அருகில் ஏரியோரம் 60 ஆண்டுகளாக 12 பழங்குடி யின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிசைகளில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இந்த குடி யிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஒருசிலர் ஆதார் அட்டை வைத்துள்ளனர். குடும்ப அட்டை கூட இல்லாமல் பழங்குடி மக்கள் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர்கள் அந்தோணி, மணிகண்டன் ஆகியோர் அந்த கிராமத்திற்கு சென்று பழங்குடி மக்களை சந்தித்து ஆய்வு செய்த னர். இதன்பின்னர் திருத்தணி வருவாய் கோட்டாட் சியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து வரு வாய் கோட்டாட்சியர் உத்திர வின் பேரில் ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் தமயந்தி, துணை வட்டாட்சி யர் லொகன், வருவாய் ஆய்வாளர் மோகன் பிரபு ஆகியோர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பழங்குடியின குடும்பங்க ளுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும், இவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து அங்கு குடியமர்த்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியர் உறுதி அளித்தார்.