districts

img

திருவள்ளூரில் முதலாவது புத்தகக்காட்சி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

திருவள்ளூர், ஏப். 3 - திருவள்ளூரில் முதன்முறையாக நடை பெறும் புத்தக்காட்சியில் மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். திருவள்ளூர் மாவட்ட புத்தக கண்காட் சிக் குழு மற்றும் பபாசி இணைந்து நடத்தும் முதலாவது புத்தகக்காட்சி மார்ச் 31 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி யது. புத்தகக்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: புத்தகத் திருவிழா 50 அரங்குகளை கொண்டுள்ளது. ஏப்.11ந் தேதி வரை நாள் தோறும் காலை 11 மணியிலிருந்து மாலை 9 மணி வரை நடைபெறும். புத்தகக்காட் சியில் 60 ஆயிரம் தலைப்புகளில் புத்த கங்கள் இடம் பெறவுள்ளன. நாள்தோறும் ஒரு தமிழ் சொற்பொழிவாளர்களால்; கருத்துரைகள் வழங்கப்படவும், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலை க்குழுவினரின் கலை நிகழ்வுகளும் நடை பெறவுள்ளது. புத்தகங்களுக்கு 10 விழுக் காடு தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.