திருவள்ளூர், பிப் 4- மெய்யூரில் உயர்மட்டப்பாலம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என நெடுஞ்சாலை துறையினர் உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. திருவள்ளூர் அருகில் உள்ள மெய்யூர் கிராமத்தையொட்டி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13.60 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க நபார்டு வங்கி மூலம் 2020இல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதற்கான பணிகள் இன்னும் முடிக்க வில்லை. மேலும் மாற்று பாதைக்காக ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப் பட்டது.அதுவும் தற்போது பெய்த மழை யில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் உயர்மட்டப்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும், தரைப் பாலத்தை தரமாக அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப்-4 அன்று மேலானூர் அருகில் மூலக் கரையில் மறியல் நடைபெறும் என அறிவித் திருந்தனர். இந்த தகவலை அறிந்த நெடுஞ்சாலை துறையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்களை அழைத்துப்பேசினர். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் உயர்மட்டப்பாலத்தை பிப்ரவரி மாதம் இறுதியில் முடிப்பது மற்றும் தரைப்பாலத்தை விரைவில் கட்டி முடிக்கப் படும் என நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் பரந்தாமன் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப் பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு, வட்டக் குழு உறுப்பினர்கள் கே.முருகன், கே.விஜயகுமார், எஸ்.கலை யரசன், கிளைச் செயலாளர் ஆர்.முரளி, வழக்கறிஞர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.