திருவள்ளூர், ஏப் 26- தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழி சாலை திட்டத் திற்காக விவசாயிகள் அனு மதியில்லாமல் பாலம் கட்டு வது, அளவீடு செய்வது, கல் நடுவது போன்ற சட்ட விரோத பணிகளை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார். தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை தேசிய நெடுஞ்சாலைக்காக முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை அழிப்பதை கைவிட வேண்டும், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் 6 வழி சாலையை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும், விவசாயிகள் ஒப்புதல் இன்றி நிலங்களை கையகப்படுத்த கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஏப்.26) திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் 6 வழிச் சாலை திட்டத்தால் பாதிக் கப்பட்டுள்ள பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை வட்டங்களை சேர்ந்த விவ சாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.சம்பத் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரு வள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் ப.சுந்தர ராசன், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.பி.பெரு மாள், மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, விவசாயிகள் சிவப்பிரகாசம், குணசேகரன், விஸ்வநாதன், ஏழுமலை ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் விவசாயிகள், மற்றும் தலைவர்கள் ஊர்வ லமாக சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது குறித்து முதல்வரின் கவனத் திற்கு கொண்டு செல்லப் படும் என்றார்.
சட்டம் சொல்வது என்ன ?
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம், விவசாயிகள் தங்களின் நில உரிமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டி, தொடர் போராட்டத்தின் விளைவுதான் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் குடியமர்வு என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இருந்த 1894 ஆம் ஆண்டு சட்டத்தில் எந்தவிதமான ஆட்சேபனையும் விவசாயிகள் தெரிவிக்க முடியாது. அரசு திட்டத்துக்கு நிலம் வேண்டும் என முடிவு செய்தால் எடுத்துக்கொள்ளலாம் என்ற அதிகாரம் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இழப்பீடு போதவில்லை என்றால் நீதிமன்றத்திற்குச் செல்லலாம் மற்றபடி நிலத்தை கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. எந்த உரிமையும் விவசாயிகளுக்கு இல்லை. விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டது அந்த சட்டம், அரசாங்க திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று சொன்னால் எந்த பகுதியில், எந்த திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தப் பகுதியை சார்ந்த 70 விழுக்காடு விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக நிலம் வழங்க ஒப்புதல் அளித்த பிறகுதான் நிலத்தை அரசு கையகப்படுத்த முடியும். 50 விழுக்காடு விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் கூட திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமே தவிர நிலத்தை கையகப்படுத்த முடியாது. நில உரிமையாளர்களுக்கு நிலத்தின் மீதான உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கான எல்லா விதமான வாய்ப்புகளையும் அந்தச் சட்டம் வழங்கியிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் நிலத்தின் மதிப்பை தீர்மானிக்கலாம் என கூறுகிறது. இந்நிலையில் தச்சூர் முதல் சித்தூர் வரை அமைய உள்ள சாலைத்திட்டத்தை விவசாயிகள் ஏற்கவில்லை. மாற்று வழியில் சாலையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தெரிவித்துவிட்டனர். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எங்கு விவசாயிகள் அனுமதி அளிக்கிறார்களோ அந்த வழியில் சாலையை அமைக்க வேண்டும் என்று சண்முகம் கூறினார். .