districts

img

மாணவி மரணம்: விசாரணை அதிகாரி நியமனம்

திருவள்ளூர், ஜூலை 25- திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் “சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல் நிலைப்பள்ளி” உள்ளது. இங்கு மாணவி சரளா 12 ஆம்  வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இந்நிலையில் திருவள் ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐ டிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. மேலும் மாணவி  வழக்கில் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர  சுந்தரி விசாரணை அதிகாரி யாக நியமனம் செய்யப்பட் டுள்ளார்.
எம்எல்ஏ ஆறுதல்
மாணவி சரளா மரணமடைந்த செய்தியை கேட்டு திருத்தணியில் மக் கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனை அறிந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க, பார பட்சமின்றி விசாரணை நடை பெறும் எனவும் தெரிவித்தார். அப்பகுதி மக்களின் கோரிக்கையான அரசுப் பள்ளி 12 ஆம்  வகுப்பு வரை தரம் உயர்த்த உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், பொதுமக்கள் கூறிய  அனைத்து கோரிக்கை களையும் தமிழக முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் அடிப்படையில் பொதுமக்கள் போராட்டத் தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.