districts

img

சாவித்ரிபாய் பூலே பிறந்த தினம்...

இந்தியாவின் முதல் ஆசிரியரான சாவித்ரிபாய் பூலே பிறந்த தினமான ஜன 3 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 100 பள்ளிகளில் அவரது படங்களை திறந்து வைத்து அவரது வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் மோசஸ் பிரபு, மாவட்ட துணை நிர்வாகிகள் சாந்தகுமாரி, எசக்கியம்மாள், ஜெயநாராயணன்,  ஏலியம்பேடு, வெங்கத்தூர், சத்தரை, ஜமீலாபாத் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் தாரிணி, ஜெயராஜ் குமார்,சரளா , பாலமுருகன் ஆகிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.