திருவள்ளூர், மார்ச் 25- மாளந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி யில் அனைத்து பாட பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி வெள்ளியன்று (மார்ச் 25) பள்ளியின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 260-மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயில்கின்றனர். இங்கு பணி செய்யும் 10 ஆசிரியர்களில் 8 பேர் பணி மாறுதல் பெற்று சென்றுள்ளனர். இத னால் மாணவர்களின் கற்கும் திறன் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஆகவே பொது தேர்வுகள் முடியும் வரை மாற்றலாகி சென்ற ஆசிரியர்களை மீண்டும் பணியாற்ற உத்திரவிடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதி காரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் இந்திய மாணவர்சங்கம் சார்பில் மார்ச் 25 அன்று பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு முழுநேர ஆசிரி யரும் 3 பகுதி நேர ஆசிரியர்க ளும் நிய மிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பொது தேர்வுகள் முடியும் வரை அனைத்து ஆசிரியர்களையும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பள்ளி முன்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்ட தகவல் அறிந்து ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் ரமேஷ், டிஎஸ்பி சாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் சங்க தலைவர்கள் ஸ்வேதா, இளவரசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியபாளையம் பகுதி செயலாளர் மதன் ஆகியோரிடம் பேசினர். கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.முடிந்த பிறகு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.