திருவள்ளூர், மார்ச் 1- மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு ரேசன் கடைகளில் ஏஓய்ஓய் அட்டை வழங்கி, உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை புதனன்று (மார்ச் 1) சந்தித்து மனு அளித்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.கீதா, மாநில துணைத் தலைவர் எஸ்.சி.எச்.பாபு, துணை அமைப்பாளர்கள் பி.நடேசன், என்.கங்காதரன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரிடம், அரசாணை 52 ன் படி தொடர்ந்து நூறு நாள் வேலை வழங்கிட வேண்டும், 4 மணி நேர வேலைக்கு முழு சம்பளமான ரூ.281 வழங்க வேண்டும், குடியிருப்பு அருகில் வேலை வழங்கிட வேண்டும், தகுதியுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு என அரசு காப்பகங்கள் திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.