கும்பகோணம் ஏப்.1- மாற்றுத்திறனாளிகளின் குறைதீர் கூட்டம் கும்ப கோணம் வட்டாட்சியர் அலுவலத்தில் கோட்டாட்சி யர் லதா தலைமையில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், கும்பகோணம் மாநகர கிளையின் சார்பில் மாநகரச் செயலாளர் பழ. அன்புமணி மற்றும் அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர். இனி வரும் கூட்டங்க ளுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு முன்னதாகவே முறையாக தகவல் கொடுக்க வேண் டும். கூட்டத்தில் கொடுக்கப் படும். கோரிக்கை மனுக்க ளின் மீது எடுக்கப்பட்ட நடவ டிக்கை பற்றிய விபரங்களை அடுத்த கூட்டத்தில் தெரி விக்க வேண்டும். அடுத்த கூட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளை வரவழைத்து, அவர்கள் கொடுக்கும் மனுக் களை பரிசீலித்து, நிறைவேற்றித் தர அரசு அதி காரிகள் உதவிட வேண்டு மென கோரிக்கை வைக்கப் பட்டது. அப்போது கும்பகோ ணம் கோட்டாட்சியர், வட்டாட் சியர் மற்றும் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி உடனுக்குடன் கோரிக்கை களை நிறைவேற்றித் தரப்ப டும் என உறுதி அளித்தனர்.