சென்னை, பிப். 21 – நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை, நகர்ப்புற உள்ளாட்சிகளின் அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளின் சட்டப்பூர்வ மான உரிமைகள் மறுக்கப் படுவதை கண்டித்து செவ்வா யன்று (பிப்.21) தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் ஒருபகுதி யாக சென்னை மாவட்டங் கள் சார்பில் ஊரக வளர்ச்சி இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ப.சு.பாரதி அண்ணா, “100 நாள் வேலை திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகளை போராடி அரசாணைகளாக பெற்றுள்ளோம். அதை அமல்படுத்த மறுக்கின்ற னர். 4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க ஒப்புக் கொண்ட இயக்குநர், ஒரு முறை மட்டும் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த வில்லை. தற்போது, பஞ்சாயத்து தலைவர்களின் தலையீடு காரணமாக 100 நாள் வேலை மறுக்கப்படுகிறது. மாதந்தோறும் 2வது செவ்வாய்கிழமையன்று வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு சிறப்பு குறை தீர்வு கூட்டம் நடத்தப்படு வதில்லை. இதனை சரி செய்ய வேண்டும்.
இதனை கண்டித்து மாநிலம் முழுவ தும் 300க்கும் மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவ லகங்கள் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது என்றார். “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பரிசோ தனை முறையில் ஒரு வார்டில் மட்டும், நூறுநாள் வேலை திட்டம், நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டமாக பரிசோதனை முறையில் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தி லும், மாற்றுத்திறனாளிக ளுக்கு சிறப்பு பணி அட்டை வழங்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் சட்டப்படி 125 நாள் வேலை வழங்க வேண்டும். ஆனால் 45-55 நாட்கள்தான் வழங்கப்படுகிறது. வேலை தராத நாட்களை கணக் கிட்டு லே-ஆப் சம்பளம் தர வேண்டும். அதற்கான ஏற்பாடு ஏதும் இல்லை. இவையெல்லாம் இருப்பி னும், குறைந்தபட்சம் நூறு நாட்கள் பணி வழங்கி, முழுச் சம்பளத்தை வழங்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அலுவலகத்தில் தலைவர்கள் மனு அளித்த னர். இந்த போராட்டத்தில், சென்னை மண்டல ஒருங்கி ணைப்பாளர் கே.பி.பாபு, மாவட்ட நிர்வாகிகள் லாரன்ஸ் ஆரோக்கிய சகா யராஜ் (தென்சென்னை), எஸ்.மனோன்மணி (மத்தியசென்னை), எஸ்.ராணி (வடசென்னை), எம்.சர ஸ்வதி எம்.சி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.