districts

img

ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டும் பேராசிரியர்

திருவள்ளூர், செப் 28- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதர வற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு செருப்பு துடைத் தும்,ஷூவுக்கு பாலீஷ் போட்டும் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட பேராசிரியர்சிவ செல்வகுமாரை பொது மக்கள் பாராட்டினர். பாடிய நல்லூரில் வசித்து வரும் பேராசிரியர், கருணை கரங்கள் எனும் அமைப்பை உருவாக்கி ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவ அன்னை தெரசா பள்ளியை துவங்கி 18 ஆண்டுகள் சேவையாற்றி வருகிறார்.  இந்நிலையில் புதனன்று (செப் 28) பழ வேற்காடு பஜார் வீதியில் நிதி திரட்டினார். இதில் கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.