districts

img

விவசாயிகளின் வயிற்றில் அடித்த பட்ஜெட்

திருவள்ளூர், ஜூலை 31- ஒன்றிய பாஜக அர சின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து  புதனன்று (ஜூலை 31), மாநி லம் முழுவதும் விவசாயி கள், பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டத்தை நட த்தினர். இதன் ஒருபகு தியாக  திருவள்ளூர் மாவட் டம், தாமரைப் பாக்கம் கூட்டுச்சாலையில்  நடை பெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “இந்த ஆண்டு ஏறக்குறைய 48  லட்சம் கோடி ரூபாய் அள விற்கு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் வெறும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் தான் விவசாயிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இன்றைக்கும் இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காடு மக்களுக்கு  வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய முக்கிய மான துறையாக வேளாண்  துறை இருந்து கொண்டி ருக்கிறது. அப்படி என்றால் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் வேளாண்துறைக்கு நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு வெறும் 3.15 விழுக் காடு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் பட்ஜெட்டில் மூன் றில் ஒரு பங்கு சலுகையாக முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது. 

பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை. தமிழ்நாட்டின் மீது  நிதி அமைச்சருக்கு என்ன கோபம் என்று தெரிய வில்லை. 

நூறு நாள் வேலை திட்டம் என்பது கிராமப்புற மக்க ளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய வாழ்வா தாரமாக உள்ளது. கடந்த ஆண்டு ரூ. 86 ஆயிரம் கோடி  தான் ஒதுக்கினார்கள். இந்த ஆண்டும் அதே நிதியை ஒதுக்குகிறார்கள். எந்த உயர்வையும் செய்ய வில்லை. இதில் ஏற்கனவே 42 ஆயிரம் கோடி ரூபாய் கூலி பாக்கி தர வேண்டி உள் ளது.அது போக வெறும் 44 ஆயிரம் கோடி ரூபாய் தான் மிஞ்சும். இந்த நிதியில் வெறும் 25 நாட்களுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு அளிக்க முடியும். திட்டத்தின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு நூறு நாட்கள் வேலை வழங்க முடியாது. இதனால் வாழ்வாதாரத்தை தேடி புலம் பெயர்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடும். 

சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கும் செய லை  பாஜக ஒன்றிய அரசாங் கம் செய்து கொண்டி ருக்கிறது. நூறு நாள் வேலைக்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருக்கி றோம் அப்போதுதான் எளிய மக்களைப் பாது காக்க முடியும்” என  பெ. சண்முகம் பேசினார்.

பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்கோட்டை வட்ட செயலாளர் எம்.பழனி தலை மை தாங்கினார். இதில் விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. சம்பத், மாவட்ட துணைத் தலைவரும் ஒன்றிய கவுன் சிலர் பி.ரவி, வட்ட தலைவர் விஸ்வநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, திருப்பதி சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். மாநிலத்தின் பலபகுதிகளில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.