districts

img

6 வழிச்சாலைப்பணியை எதிர்த்து மே 31 அன்று கருப்பு கொடி ஏற்றுவீர்! விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் அழைப்பு

திருவள்ளூர், மே 9- தமிழகத்தில் தச்சூர் முதல் ஆந்திரமாநிலம் சித்தூர் வரை 6 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய க்கோரி மே 31 அன்று  பொதுமக்கள் வீடுகளில், கடைகளில், விவசாய நிலங்களில் கருப்பு கொடி ஏற்று வோம் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் பெ.சண்முகம் அறிவித்துள் ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை நில விவசாய சங்கம், தேசிய நெடுஞ் சாலைத்துறை எதிர்ப்பு நடவடிக்கை குழு ஆகிய அமைப்புகள் சார்பில் ஞாயிறன்று (மே 8) ஊத்துக் கோட்டையில் நில பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சண்முகம் பேசுகையில் இத்திட்டத்திற்கு  நிலங் களை தர முடியாது என்று கூறிய பிறகும் மாவட்ட நிர்வாகம் நிலத்தில் அளவீடு செய்வது கல் நடுவது, நோட்டீஸ் வழங்குவது என்கிற முறையில் விவசாயிகள் மத்தியில் மனரீதியாக இந்த திட்டம் வந்தே தீரும் என்பது போன்ற ஒரு தோற்ற த்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். விவசாயநிலத்தை கூறுபோடும் இந்த 6 வழிச்சாலை என்பது அதானி துறைமுகத்திற்கு தான் என்று எல்லோரும் அறிவர். இன்னும் அந்த துறைமுமே வராதபோது சாலை எதற்காக போடப்படுகிறது. தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளது. அதானி துறைமுகம் வேண்டாம் என்று மக்கள் போராடும் போது இந்த விசயத்தில் தமிழக அரசு மவுனமாக இருப்பது நியாய மல்ல. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது நிலம் கையகப்படுத்தும்  பிரச்சனைகளில் விவசாயிகள் பக்கம் நின்று வாதாடியது, பல இடங்களில் திமுக போராட்டங்கள்  நடத்தின.

நிலப் பயன்பாடு சம்பந்தமாக ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் விவசா யிகள் விருப்பத்திற்கு விரோதமாக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது. தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும். முப்போகம் விளையக்கூடிய  நிலங் களை சாலை போடும் பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என நிலம் கைய கப்படுத்தும் சட்டம் 2013 ல் தெளி வாக குறிப்பிட்டுள்ளது. சட்டத்திற்கு விரோதமாக ஒரு அரசு செயல்பட முடியுமா என்றும் சண்முகம் கேள்வி எழுப்பினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3033 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைப்ப டும் என்று  சட்டமன்றத்தில் அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே ஓசூரில் 4 சிப்காட் உள்ளது. 5 ஆவதாக ஒரு சிப்காட் அமைக்கப்படும் என அமைச் சர் கூறியுள்ள இடம் ஏறக்குறைய 2500 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய ஆற்றுப் பாசன பகுதியாகும். ஏற்க னவே எடுக்கப்பட்ட நிலங்களில் தொழிற்சாலைகள் கட்டி கொடுக்கப் பட்டதா என்றால் இல்லை என்கி றார்கள்.

தமிழ்நாடு முழுவதும் சிப்காட் தொழில்பேட்டைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 50 விழுக்காடு  இன்னும் பயன்படுத்த வில்லை. நஞ்சை நிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்ற  முடிவுக்கு தமிழக அரசு வர வேண்டும். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் தச்சூர்-சித்தூர் சாலை அமைப்பதற்கான பணிகளை அதிகா ரிகள் மேற்கொண்டு வருவதால் வரும் மே  31 அன்று வீடுகளில், கடை களில், விவசாய நிலங்கள் என எல்லா இடங்களிலும் பல்லாயி ரக்கணக்கான கருப்பு கொடிகள் ஏற்றி அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற் கும் எதிர்ப்பை தெரிவிப்போம் என்றார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் ஜி சம்பத் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.பெருமாள் வர வேற்றார். விச மாநிலப் பொருளா ளர் கே.பி. பெருமாள் துவக்க உரையா ற்றினார். இதில் விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், எஸ்.கோபால் (சிபிஎம்), ஏ.ஜி.சிதம்பரம் (காங்கிரஸ்),  கோபி நயினார் (விசிக),  பாபு (மதிமுக) உட்பட பலர் பேசினர்.