districts

ஊழலுக்கு துணைபோகும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

 திருவள்ளூர்,ஜன.1- சட்டவிரோதமாக செயல்படும் தொழிற் சாலைகளுக்கு துணை போகும், கும்மிடிப் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு தேவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார் வலியுறுத்தி யுள்ளார். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் அண்மையில் ஒன்றிய கவுன் சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபுழல்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார் பேசுகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உரிய  அனுமதி இல்லாமல் 50 க்கும் மேற்பட்ட தனி யார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதன் மீது பிடிஓ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்டு களாக பொது மக்கள் மற்றும் கவுன்சிலர் ரவிக்குமார் ஆகியோர் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர். கொடுக்கப்பட்ட புகார் கள் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு தேவன் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, மாறாக சட்ட விரோதமாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக செயல் படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் 25 துறைகளை சார்ந்த  அரசு அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். ஆனால் மிகக்குறைவான எண்ணிக்கையில் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  இதனால் மக்களின் குறைகளை யாரிடம் தெரிவிப்பது, அதை எவ்வாறு நிவர்த்தி செய்வது என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து பேசிய ரவிக்குமார் கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஊழல் குற்றவாளிகளுக்கு துணைபோவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.