திருவள்ளூர், பிப்.3- புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழ் நாடு அரசு அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளி யன்று (பிப் 3) செங்குன் றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முறையான ஆவணங் ்கள் உள்ள ஆட்டோக்க ளுக்கு காவல்துறையினர் ஸ்டிக்கர் வழங்க வேண்டும், நலவாரியத்தின் மூலம் அரசு கட்டக்கூடிய அடுக்கு மாடி குடியிருப்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச வீடு வழங்க வேண் டும். கேரளாவை போல தமிழ் நாட்டில் ஆட்டோக்களுக்கு புதிய செயலி (ஆஃப்) உரு வாக்க வேண்டும், ஆவணங் கள் சரியாக இருந்தும் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், செங்குன்றம் கூட்டுச் சாலை முதல் திரு வள்ளூர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையை சீர மைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் ்டம் நடைபெற்றது. சோழவரம் ஒன்றியச் செயலாளர் சா.வேலு தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத் செயலா ளர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட பொதுச் செயலா ளர் எம்.சந்திரசேகரன், உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம், தையல் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.நடேசன், பொது தொழிலாளர் சங்கத் தின் தலைவர் ஏ.நடராஜன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணை நிர்வாகி கள் சந்திரன், பரமசிவம், காந்தாராவ், சரவணன் ஆகி யோர் பேசினர். நிறைவாக மதன் நன்றி கூறினார்.